Thursday, February 16, 2012

களபறையர்கள், சமணர், சித்தனவாசல், புதுக்கோட்டை


ஆதிமனிதன் புதுக்கோட்டை மாவட்டத்தில் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் கிடைத்துள்ளன. பழைய கற்கால கல்லாயுதம் ஒன்று திருமயம் வட்டம் குருவிக்கொண்டான் பட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள இயற்கைக் குகைகளும் பாறை இருக்கைகளும் மனிதன் தொன்று தொட்டே இப்பகுதியில் வாழ்ந்து வந்திருக்க வேண்டுமெனபதற்கு மேலும் சான்றுகள் பகர்கின்றன.



இந்த பழைய கற்கால கல்லாயுதம் ஒன்றைத் தவிர வேறு ஆயுதங்கள் கிடைக்கவில்லை. மேலும் புதிய கற்கால நாகரீகத் தடயங்களும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் உலோகக்கால நாகரீகச் சுவடுகள் நிறைய கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இக்காலத்தின் பிற்பகுதியான இரும்பு காலத்தில் நிலவிய பெருங்கற்காலத்தில் உபயோகத்திலிருந்த செம்பு, இரும்பு ஆயுதங்கள் மட்பாண்டங்கள், மணிகள், அணிகலன்கள் இறந்தோரைப் புதைத்த புதைக்குழிகள், இறந்தோரின் நினைவுச் சின்னங்களாக பயன்படுத்தப்பட்ட கல்லறைகள் புதைகுழித் தாழிகள் ஆகியன நிறைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இரும்புக்கால - பெருங்கற்கால நாகரீகத்தின் ஆரம்ப காலம் கி.மு 600 வரை போகட்டும் என்றூ கருதப்படுகிறது. இந்த பண்பாடு சங்க காலத்திலும் ஆங்காங்கு நடமுறையிலிருந்ததாக அக்கால இலக்கியங்கள் சான்று பகிர்கின்றன. குறிப்பாக இறந்தோரை தாழியிட்டு புதைக்கும் முறை சங்க காலத்தில் பழக்கத்திலிருந்த செய்தியை புறநானூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை போன்ற நூல்களிலிருந்து அறிகிறோம். இது முதுமக்கள் தாழி, ஈமாத்தாழி, முதுமக்கள் சாடி என குறிப்பிடப்பட்டுள்ளது. இறந்தோர் நினைவாக பள்ளிப்படை அமைத்த செய்தியும் காணப்படுகின்றது.


"மாயிறும் தாழி கவிப்பத் தாவின்று கழிக வெற்கொல்லாக் கூற்றே" என நற்றிணையும்(271)


"மன்னர் மறைத்த தாழி வன்னி மரத்து விளங்கிய காடே" எனப் பதிற்றுப்பத்தும்(44)


"கொடி நுடங்கு யானை நெடுமாவளவன் தேவர் உலகம் எய்தினன் ஆதலின் அன்னோற் கவிக்கும் கண் அகந்தாழி" எனப் புறநானூறும்(228) கூறுவதைக் காணலாம்.


"சுடுவோர், இடுவோர், தொடுகுழிப் படுப்போர் தாழ்வயினடைப்போர் தாழியிற் கவிப்போர்" (6-11-66-67) என்று மணிமேகலை ஐந்து வகை ஈம முறைகளைக் குறிக்கிறது.


புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் பெருங்கற்கால புதைகுழிகளில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகளில் கிடைத்த தாழிகள், மட்பாண்டங்கள், இரும்பு ஆயுதங்கள், கல்லாயுதங்கள், ஆபரணங்கள், மணி வகைகாள், வளையல்கள் ஆகியன புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.



மேலே கூறியவற்றிலிருந்து புதுக்கோட்டைப் பகுதியில் வரலாறிற்கு முற்பட்ட காலங்களான பழைய கற்காலம், புதிய கற்காலம், இரும்புக் காலம் போன்ற காலக்கட்டங்களில் நாகரீகம் படிப்படியாக உயர்ந்து அவ்வப்போது தென்னிந்தியாவின் பிற பகுதிகளில் பரவியிருந்த நாகரீக வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டிருந்தது. இரும்புக் காலத்திற்கு பிறகு நாகரீகம் துரிதமாக வளம் பெற்று கிறிஸ்து சகாப்தத்திற்கு முன்னும் பின்னும் உள்ள நூற்றாண்டுகளில் செம்மையான வரலாறு துவங்குகிறது. கி.மு 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகருடைய கல்வெட்டு சேர சோழ பாண்டியரைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அதுவே தென்னிந்திய வரலாற்றுப் பாதையில் ஒரு முக்கிய காலக்கட்டமாகும். அதனைத் தொடர்ந்து பாண்டி நாட்டில் கிடைத்துள்ள பிராமிக் கல்வெட்டுகள் வரலாற்றுத் தொடக்க காலத்தின் அறுதியான சான்றாகத் திகழ்கின்றன.

பிராமிக் கல்வெட்டு


பிராமி (தமிழ்) கல்வெட்டு (எழுத்துகள்) சுமார் கி.மு 200 முதல் கி.பி 200 வரை வழக்கிலிருந்ததாக கல்வெட்டு வல்லுநர்கள் கருதுகின்றனர். தமிழ்மொழியை எழுதுவதற்கு பாமர மக்களிடம் இவ்வெழுத்துப் பரவலாக வழக்கத்திலிருந்து இக்கல்வெட்டுகளில் தூய தமிழ்ச் சொற்களும், பிராகிருத மொழிச் சொற்கள் சிலவும் காணப்படுகின்றன.சித்தன்னவாசல் ஏழடிப்பட்டம் என்னும் குகையில் பிராமி எழுத்துக் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. கல்வெட்டு குகையின் தரையில் காணப்படும் வழவழப்பான ஒரு படுக்கையின் விளிம்பில் பொறிக்கபபட்டுள்ளது.


" எருமியூர் நாடு குழ்ழூர் பிறந்த கவுடு இடன்கு சிறுபாவில் இளையார் செய்த அதிட்டானம்"
என்ற இக்கல்வெட்டு படிக்கப்பட்டுள்ளது. அதாவது எருமையூர் நாட்டில் குழுழூர் என்னும் ஊரில் பிறந்த கவுடிகன் என்னும் முனிவருக்கு சிறுபாவில்(அக்காலத்தில் சித்தன்னவாசல் சித்துப்போரில் என அழைக்கப்பட்டது என்றும் இதுவே பின்னர் சிறுபாவில் என மறுவியது).






சமனமதம் அக்காலத்திலிருந்தே புதுக்கோட்டைப் பகுதியில் தழைத்தோங்கி இருந்ததற்கான சான்றுகள் இதன் மூலம் தெரியவருகிறது. இக்காலத்திற்கும் பிற்காலத்திலும் எடுக்கப்பட்ட பல சமண சின்னங்களும் சிற்பங்களும் இடிந்து போன சமணப்பள்ளிகளும் இங்கு நிறையக் காணப்படுகின்றன.



களபறையர் கால சித்தன்னவாசல் அதிசயங்கள்:



சித்தன்னவாசல் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர். அந்த மாவட்டத்தின் தொல்லியல் பாரம்பரியம் மிக்க இடங்களில் புகழ்பெற்றதும் இந்த இடம்தான்.

இங்கே அழியும் தருவாயில் உள்ள பழங்கால ஓவியம், அந்தஓவியம் அமைந்துள்ள குகைக்கோயில், அதன் பிறகு சில பல சமணர் படுக்கைகள், மிகப் பழமையான கல்வெட்டுக்கள் என்று அனைத்தும் ஓரிடத்தில் காணக்கிடைக்கின்றன. இவை அனைத்தும் நமது பாரம்பரியத்திற்கு சமணர்களின் பங்களிப்பாகும். அவை மட்டுமின்றி, ஏகப்பட்ட முதுமக்கள் தாழிகள் இங்கே கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பொதுவாக புதுக்கோட்டை மாவட்டத்தில் சமணர்கள் பலகாலம் தங்கி இருந்ததற்கான சான்றுகள் அதிக அளவில் கிடைத்துள்ளன. சில சில ஊர்களின் கூட இடிந்து போய் அடிவாரம் வரை மிச்சமமுள்ள சமணர் கோயில்களையும், அனாதையாக கைவிடப்பட்டுள்ள சமணர் சிலைகளும் கிடைத்துள்ளன.

தமிழக தொல்லியல் துறையின் சமணர் பட்டியலில் புதுக்கோட்டை மிக முக்கியத்துவம் பெறுகிறது. அப்படிக் கைவிடப்பட்டுள்ள சில சமணர் சிலைகள் சில இடங்களில் வழிபாட்டிலும் உள்ளன. மொட்டைப் பிள்ளையார், சடையர் என்று மக்கள் அவர்கள் விருப்பத்திற்கேற்ப பெயர் சூட்டி, செவ்வந்திப்பூ மாலை, சாம்பிராணி, குழாயில் மாரியம்மன் பாடல் என்று சில புண்ணியம் பெற்ற சமணர் சிலைகள் வழிபாட்டில் உள்ளன.

இந்த இடம் ஒரு குன்று. கிட்டத்தட்ட 200 அடி உயரம் உடையது. சாலையிலிருந்து போனதும் செங்குத்தான அந்த மலையில் ஓரத்திலிருந்து படிக்கட்டுகள் தொடங்குகின்றன. ஒரு புறம் ஏறி மறுபுறம் அடைந்தால் முதலில் வருவது சமணர் படுக்கைகள்.

அவற்றை விடுத்து கீழே இறங்கி அடுத்த அரை கிலோமீட்டர் போனால் குகைக்கோயிலும் அதனுள் வரையப்பட்டிரு்ககும் அழகிய ஓவியமும் உள்ளன.
அந்த குன்றைச் சுற்றி பல்வேறு இடங்களில் முதுமக்கள் தாழிகளைப் பார்க்கலாம். கிமு 2 அல்லது 3ஆம் நூற்றாண்டு தொடங்கி கிபி 10 ஆம் நூற்றாண்டு வரை சித்தன்னவாசலில் சமணம் தழைத்தோங்கி உள்ளது. கிபி 7 அல்லது 9ஆம் நூற்றாண்டுகளில் புகழ்பெற்ற ஓவியம் வரையப்பட்டுள்ள அறிவர் கோயில் குடையப்பெற்றுள்ளது.

இங்கே சமணர் படுக்கைகள் மற்றும் எழுத்துருக்கள் உள்ள ஏழடிப்பட்டம்,
குகைக் கோயிலும் ஓவியமும் உள்ள அறிவர் கோயில், மலை உச்சியில் ஒரு சுனை, நவ்வாச்சுனை என்று ஒரு பாதி நாளுக்கு வரலாற்றுசு் சுற்றுலா கொண்டாட ஏதுவான வசதிகள் அனைத்தும் உண்டு.இந்த இடத்தை ஏழடிப்பட்டம் என்று கூறுகிறார்கள்.



முன்னரே சொன்னது போல, ஒரு மலையில் செங்குத்தாக கடந்து மறுபக்கம் இறங்கவேண்டி உள்ளது. இருக்கும் ஒரு அடி இடத்தில் நமக்காக பாதை அமைந்துத் தந்துள்ளது தொல்லியல் துறை. கொஞ்சம் பலமாகக் காற்றடித்தால், இதயம் உடலை விட்டு வெளியில் வந்து துடிக்கும், அந்த அளவுக்கு செங்குத்தான சரிவு மறுபுறம். எழு காலடித்தடங்களைச் செதுக்கி அதன் மூலமாக முனிவர்கள் இந்த இடத்தை வந்த போயிருக்கிறார்கள். அதனாலேயே இந்த அழகான பெயரைச் சூட்டியிருக்கின்றனர்.


இந்த ஏழடிப்பட்டம் என்பது இயற்கையாகவே மலையில் அமைந்த ஒரு குகை. மலையில் மடிப்பு மாதிரியான ஒரு அமைப்பு. காதில் கூச்சலிடும் காற்று, தனிமை, அமைதி, பக்கத்தில் உதவிக்கு என்று அழைக்க யாருமே இல்லாத ஒரு புதர் காடு என்று இந்த இடம் துறவிகளுக்காகவே அமைக்கப்பட்டிருக்கும் போல.

கயாவின் லோமாஸ் ரிஷி, புவனேஸ்வரத்தின் உதயகிரி குகைகள், தமிழ்நாட்டின் ஆனைமலை, அழகர்மலை போன்றவையும் இத்தன்மையதே. புதுக்கோட்டையிலேயே, குடுமியாமலை, நார்த்தாமலையில் இத்தகைய குகைகள் உண்டு. மலை இருந்தால் குகை இருப்பது சகஜம்தானே!



இங்கேதான் சமண துறவிகள் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தங்கி சமய சேவைகள் செய்து, நோண்பிருந்து தம் நல்லுயிர் ஈந்திரு்கின்றனர். இந்த குகை ஒரு அறை போன்று தோற்றம் உடையது. தொலலியல் துறைக்கே உண்டான வவ்வால் நாற்றமும் உண்டு. இங்கே 17 படுக்கைகள் அமைந்துள்ளன, கல் தலையணையோடு! அதில் ஒன்று மட்டும் பெரியது, அனேகமாக அதுவே பழையது.




இதைப் பற்றி குறிப்பிட காரணம் உண்டு. அனேகமாக இந்த படுக்கையைச் சுற்றித்தான் தென்னிந்தியாவின் மிகப் பழமையான எழுத்துவடிவம் கல்வெட்டாய் நமக்குக் கிடைக்கிறது. தமிழ் மொழியை அசோக பிராமியில் பதித்துள்ளார்கள். இதன் காலம் கிமு 2 அல்லது 3ஆம் நூற்றாண்டு. கிட்டத்தட்ட 2010 வருடங்களுக்கு முந்தியது!!

படத்தைச் சுற்றி எழுதியிருப்பது கல்வெட்டின் வடிவம். எருமிநாட்டில் உள்ள குமிழூரில் பிறந்த காவுடி (துறவியோட பெயர்)க்காக, தென்கு சிறுபோசில் ஊரைச் சேர்ந்த இளையர் செய்தளித்த படுக்கை என்பதே அதில் கூறப்படம் செய்தி. செய்தியில் விசேசமில்லை, அது செய்யப்பட்ட காலத்தில்தான் சிறப்பு உள்ளது.

பெரும்பாலும் அனைத்துப் படுக்கைகளும் கல்வெட்டுக்களைக் கொண்டுள்ளன. பொதுவாக யாருக்காக யார் செய்து கொடுத்த படுக்கை என்ற அதில் எழுதப்பட்டிருக்கும். சில படுக்கைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட கல்வெட்டுக்களும் உண்டு. ஒரே படுக்கையை பலரும் பயன்படுத்தி இரு்ககலாம் அல்லவா.

ஓவியங்கள் 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த குகைக்கோயில்தான் அறிவர் கோயில். சாலையிலிருந்து ஒரு நூறு அடி தூரத்தில் உள்ளது இந்த கோயில். இதன் உள்ளே சமண ஆச்சாரியர்களின் சிலைகளும், விதானத்தில் ஓவியங்களும் காண்பபடுகின்றன.



கர்ப்ப கிரகத்தின் சிற்பங்கள்,சித்தன்னவாசல் ஓவியங்கள், கிமு 2- கிபி 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அஜந்தா, 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இலங்கை சிகிரியா, 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாக் குகை ஓவியங்கள் (மத்தியபிரதேசம்) இவற்றுடன் காலத்திலும், வரையும் முறையிலும், தரத்திலும் ஒப்பிடத்தக்கது. தென்னிந்தியாவைப் பொறுத்தவரை, சித்தன்னவாசல் மட்டுமே முற்கால சமண ஓவியங்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.




சமவஸரணம் என்ற சமண சமய தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்டுள்ள விதான ஓவியங்கள் நிஜமாகவே அழகான மற்றும் நேர்த்தியானவை. மேலே கொடுக்கப்பட்டுள்ள ஓவியங்களில் கோட்டோவியங்களாகக் கொடுக்கப்பட்டுள்ள நடன மாதர்களின் படங்கள் அழிந்துவிட்டது. அழித்துவிட்டார்கள் என்பதே சரியான வார்த்தையாக இருக்கும்.

நவ்வா மரத்தூர்களில் ஒளிந்திருக்கும் நவ்வாச்சுனை, இந்த சுனையின் உள்ளே ஒரு குகைக்கோயில் உள்ளது. சிவனுக்கானது.இதுமாதிரியான கல் வட்டங்களை நிறைய பார்க்கலாம். பழங்கால மக்களைப் புதைத்த இடங்கள் இவை. இங்கிருந்து எடுக்கப்பட்ட தாழிகளில் ஆயுதங்கள் போன்றவையும் இருந்திருக்கின்றன.
புதுக்கோட்டை – மணப்பாறை சாலையில் புதுக்கோட்டையிலிருந்து 17 கி.மீட்டர்கள். பேருந்து வசதிகள் உண்டு. உத்தேசமாக அரை மணிக்கு ஒன்று.



கவனத்தில் கொள்ளவேண்டியவை. சித்தன்னவாசல் ஓவியங்களை காலத்தின் அடிப்படையிலேயே அதன் முக்கியத்துவத்தைப் பார்க்கவேண்டும்.அஜந்தா குகை ஓவியங்களைப் போன்று பல ஓவியங்களைப் பார்க்க இயலாது. இருப்பது சிறிய குகைக்கோயில்தான். அதுவும் ஒனறுதான்.இருக்கும் ஓவியங்களும் அழிந்து வருகின்றன. இருப்பவையும் பக்கத்தில் நடைபெற்றுவரும் கல்குவாரிகளால் நாளுக்கு நாள் உதிர்கின்றன. சமண சமயத்திற்கு என்று நமக்கு இருக்கும் ஒரே இடம் இதுதான்.



அம்மதத்தைச் சேர்ந்த அல்லது சேராத அமைப்புகளோ தனி மனிதர்களோ, சற்று கவனம் எடுத்து சித்தன்னவாசலைக் காப்பாற்றினால் மட்டுமே நமது சந்ததியினருக்கு சித்தன்னவாசல் ஓவியத்தைக் காட்டலாம். இல்லையேல் களபிரார்களின் முக்கியத்துவத்தை உணர்த்த இருக்கும் சில ஆதாரங்களில் நாம் கானபோவது வெற்றிடமே!அதுமட்டுமில்லாமல் ஆள் அரவமற்ற இடமாக இருப்பதால், நம் ஊருக்கென உள்ள அலங்கோலங்களும் நடைபெறும். தக்க துணையுடனும் ஏற்பாடுகளுடனும் செல்லுதல் உகந்தது.


















கருவேல மரமும் சாதீயமும்....

நம் மக்களிடையே சண்டை வந்தால் அடிக்கடி உபோயோகிக்கும் வார்த்தை "உன்னை வேரோடு வெட்டி சாய்க்கிறேன் பார்" சொல்கிறார்கள்? 

மரத்தின் மேல் பாகங்களையும் அடிமரத்தையும் வெட்டாமல், அதெப்படி கண்ணுக்கு தெரியாத வேரை முதலில் வெட்டி சாய்க்க முடியும்?

எங்க ஊர்ல அதிகமா இருக்கிறது வேலிகருவை மரம்தான் அதாங்க கருவேல மரம். இந்த மரத்தை வெட்டும் போது என்ன செய்வாங்க என்றால் முதலில் கிழே உள்ள முட்களுடன் கிளைகளை வெட்டி விட்டு சரி செய்து கொள்வார்கள், அப்புறம் அடி மரத்தை வெட்டுவார்கள், (எல்லா மரத்தையும் அப்படித்தானே வெட்டுவார்கள் இவன் என்னடா லூசு மாதிரி சொல்றான் என்று நினைக்க வேண்டாம்?)

நான் இந்த மரத்தை எடுத்துகாட்டாக சொல்வதற்கு நிறைய காரணங்கள், அதில் உள்ள முட்கள், அடி மரத்தில் முட்கள் இருக்காது கிளைகளில் முட்கள் இருக்கும் அந்த முட்கள் குத்தினால் ரண களமாகி விடும்,......... ஒரு சின்ன கிளை இருந்தால் கூட பல்கி பெருகிவிடும், இந்த மரத்தின் வேரை பிடுங்கி எரிவது சாதாரண காரியமில்லை, இந்த மரத்தின் வேர் மண்ணை கெடுத்து குட்டி சுவராக்கி விடும், இந்த மரம் அடுப்பெரிக்க தவிர வேறு எதுக்கும் பயன்படாது, விதை விழுந்து குட்டி குட்டியாய் மரங்கள் முளைக்க ஆரம்பித்துவிடும் தாய் மரத்தின் நிழலில்! எதை தின்றாலும் செரிக்கும் என் கோமாதாகளுக்கு கருவேல் மர விதை மட்டும் செரிக்காது, அந்த சாணியை உரமாக பயன்படுத்தும் போது வயலில் முளைத்து மண்டி விடும் அதை பறிக்க எவ்வளவு சிரமபடவேண்டி இருக்கும் தெரியுமா?

இங்கே இருக்கும் கருவேல் மரத்தில் முட்களுடன் இருக்கும் கிளைகள்தான் வர்னாசிராமம் என்கிற பார்பனநீய ஜாதீயம், அவைகள்தான் ஷத்திரிய, சூத்திர கூட்டங்கள், அடி மரம்தான் பிரமினர்கள், அதாவது முட்களுடன் கூடிய கிளைகளை தாங்கி பிடிப்பவர்கள், வேர்த் தான் பார்ப்பனீயம் என்கிற வர்ணாசிரம ஜாதீயம்.

வர்ணாசிரமம்/பார்பநீயம் என்ற அந்த வேருக்கு உயிர் கொடுத்து கொண்டு மண்ணை கெடுத்து கொண்டு இருப்பவர்கள் யார்? பிரமினர்களா? ஷத்ரியர்களா? சூத்திரர்களா?

எப்படி முட்களுடன் உள்ள கிளைகளை அடி மரத்தோடு வெட்டாமல் வேரை தோண்ட முடியும்? அடிமரத்தை மட்டுமே குற்றம் சொல்பவர்கள் ஏன் கிளைகளை வெட்ட முன் வருவதில்லை?

முள் இல்லாத அடிமரம் சும்மா இருக்கிறது ஆனால் முட்களுடன் இருக்கும் கிளைகள் முட்களை கீழே உதிர்த்தவண்ணம் இருக்கிரன்ற, அந்த கிளைகளை என்ன செய்யலாம்? என்று சொல்லுங்கள்?


Monday, February 6, 2012

13.12.1960- ‘விடுதலை’யில் பெரியார் ஈ.வெ.ரா. எழுதிய தலையங்கம். இதில் இருந்து சில பகுதிகளும் அதில் இருந்து எழுந்த சில சந்தேகங்களும்..

13.12.1960- ‘விடுதலை’யில் பெரியார் ஈ.வெ.ரா. எழுதிய தலையங்கம். இதில் இருந்து சில பகுதிகளும் அதில் இருந்து எழுந்த சில சந்தேகங்களும்..


"இந்த நாட்டில் இன்று இரண்டே ஜாதிகள் சாஸ்திரத்தில் கூட்டத்தில் இருந்து வருகின்றன. அவை: 1. “பிராமண” ஜாதி;, 2. “சூத்திர” ஜாதி. அதாவது மேல் ஜாதி; கீழ்ஜாதி; மற்றும் நாட்டு மக்களில் ஜாதிகள் என்று சொல்லப்படுபவைகள் எல்லாம் அந்த இரு ஜாதிகளின் அதாவது “பிராமண ஜாதி”, “சூத்திர ஜாதி” என்பதன் உட்பிரிவுகள் தானே அல்லாமல் – தனிப் பிறவி ஜாதிகள் அல்ல. உதாரணமாக “பிராமணரில்” அய்யர், அய்யங்கார், ராவ், ஆச்சாரி, சாஸ்திரி என்பவர்கள் எல்லாரும் பிராமணன் என்கின்ற ஒரே ஜாதியைச் சேர்ந்தவர்களே ஆவார்கள். இவர்களுக்கு “இந்து” சாஸ்திரங்களிலும் “இந்து” சட்டங்களிலும் ஒரே அந்தஸ்துதானே ஒழிய தனித்தனி உயர்வு தாழ்வு அந்தஸ்து கிடையாது.

அதுபோலவே “சூத்திரன்”களிலும் வேளாளன், படையாச்சி, நாயக்கன், செட்டி, ஆசாரி, நாடான், வண்ணான், நாவிதன், குயவன், செம்படவன், பள்ளன், பறையன், சக்கிலி என்று சொல்லப்படும் பிரிவுகளும் மற்றும் முதலியார், பிள்ளை, கவுண்டர், தேவர், கள்ளர், மறவர், உடையார், அகமுடையார், தேவாங்கர், செங்குந்தர் முதலிய பிரிவுகளும், பட்டங்களும் எல்லாம் “சூத்திர” ஜாதியின் உட்பிரிவுகளே தவிர, பிறவி ஜாதிகளில் சேர்ந்தவை அல்ல.
மற்றும் ஒரு பிரிவினுள் பல உட்பிரிவுகளும் உண்டு. இவை பெரிதும் உழைப்பு, தொழில் ஆகியவற்றில் ஈடுபட்ட கோஷ்டிகள் பற்றி ஏற்பட்ட பிரிவுகளே அல்லாமல் புழங்குவதற்கு கொள்வினை கொடுப்பனை செய்ததற்குச் சட்டத்தால் – சாத்திரங்களால் தடையும் தனித்தனி நீதி – நியமமும், ஆசார – அனுஷ்டானமும் ஏற்படுத்தப்பட்ட ஜாதிகள் அல்ல/"


ஏற்றுகொள்ள வேண்டிய கருத்துக்கள் தான். ஆனால் இவரின் இந்த கருத்தை இவரின் பிள்ளைகளும் பேரன்களும் எற்றுகொண்டு இருக்கிறார்களா? 

அப்படி ஏற்றுக்கொண்டு, ஜாதி, சம்பிராதாயம், ஆசார-அனுஷ்ட்டானமும் பார்க்காமல், திராவிட கழகத்தில் நடை பெற்ற பள்ளர்-பறையர்-மறவர்-சக்கிலியர்-வன்னியர்-குயவர்-கோனார்-செட்டியார் மற்றும் உள்ள ஜாதிகளில் நடை பெற்ற கலப்பு திருமணங்கள் எத்தனை? 




//காமராசர் ஆட்சி நமக்குக் கொடுத்து வரும் சஞ்சீவி மாத்திரையான கல்வி – உத்தியோகம் – பதவி ஆகிய காரியங்களால் எந்த ஜாதிக்கு ஆபத்தோ -கேடு காலமோ ஏற்படுமோ அந்த ஜாதிதானே எதிர்க்க வேண்டும்? எதிர்த்துத் தீரவேண்டும்? அப்படிப்பட்ட ஜாதிதானே இன்று எதிர்ப்பதோடு காமராசரையே கவிழ்க்க வேண்டும் என்று பாடுபடுகிறது. இது ஒன்றே போதுமே எப்படிப்பட்ட மூடசிகாமணியும் காமராசர் ஆட்சியால் ஜாதி ஒழிவதற்குக் கல்நடு விழா நடத்திக் கட்டடம் துவக்கப்பட்டு விட்டது” என்பதை உணர்ந்து கொள்ள முடியுமே! இதைப் பார்த்த மற்றத் தமிழன் இந்தக் கட்டடம் பலமாகக் கட்டப்படவும், சீக்கிரம் முடிவு பெறவும் பாடுபடுவதுதான் அவனது பிறப்பை உயர்த்திக் காட்டும் சின்னம் ஆகுமே தவிர, எதிர்ப்பது, கவிழ்க்கப் பார்ப்பது எதைக் காட்டும் என்பதை நீயே யோசனை செய்துபார்.ஆகவே என்னைப் போல் புரட்சி, கிளர்ச்சி செய்து, அதனால் மாள உனக்குத் துணிவில்லை ஆனால்,முதலாவது எதிரியோடு சேராதே! எதிரியைக் கவிழ்க்கப் பாடுபடு!இரண்டாவது, காமராசர் ஆட்சிக்கு ஊக்கம் ஏற்படும்படி உற்சாகப்படுத்து முட்டுக்கட்டை போடாதே! எதிரிகளுக்கு இடம் கொடுத்து வாழ நினையாதே! இந்த அளவுக்கு நீயும் மற்றத் தமிழர்களும் உணர்ந்தால் போதும் என்பதோடு, மற்றக் காரியங்களை உடல் – பொருள் – ஆவியைக் கொடுக்கும் அளவுக்கு நாங்கள் (திராவிடர் கழகத்தார்) பார்த்துக் கொள்ளுகிறோம்//


பிரமினர்கள் எதிரிகள்தான், ஆனால் இந்த ஜாதி ஹிந்துக்கள், இவர் சொல்லும் திராவிடர்கள் துரோகிகள்தானே, அந்த துரோகிகளை எதிர்த்து இவரோ இவரின் கூட்டமோ இதுவரை என்ன செய்து இருக்கிறார்கள்? 

காமராஜரை கவிழ்த்தது எந்த பிராமின கூட்டம்? திமுக அண்ணா மற்றும் கருணாநிதி என்ற நாத்தீக ஹிந்து கூட்டமா அல்லது காங்கிரஸ் கூட்டமா அல்லது அப்போது இல்லாத பிஜேபி பிராமின கூட்டமா? இவர் யாருக்காக புரட்சி செய்தார்? திராவிடருக்கா ஆதி திராவிடருக்கா? இவர் ஏன் ஆதிதிராவிட இயக்கம் ஆரம்பிக்கவில்லை? 

இங்கே தமிழ்நாட்டில் நடைபெறும் ஜாதி வெறி கூட்டங்களுக்கு யார் அதரவு அழித்துக்கொண்டு இருப்பது? பெரியாரின் பிள்ளைகளும் பேரன்களும்தானே, அப்படி இருக்க இவரை பின்பற்றுகிறேன் என்று சொல்பவர்கள் எல்லாம் யார்? எதற்காக அவர்கள் திராவிடமும் தமிழ் தேசியமும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்? 


பெரியாரை பின்பற்றுகிற இந்த அறிவு ஜீவி கவுண்டர் கவுண்டர் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்வது ஏன்? அந்த ஜாதியை பற்றி சினிமா படம் எடுக்கும் போது "ஜாதி பெயர் வைத்த படத்தில் நடிக்க மாட்டேன், ஜாதி பெரியாருக்கு எதிரானது" என்று சொல்லி எதிர்க்காமல் ஏன் அந்த படங்களில் நடித்தார்? 

இந்த வீரமணி அவர்கள் கொஞ்ச நாள் ஜெயாவை அன்புசகோதரி என்று சொல்லி ஜால்ரா போட்டார், இப்போது பார்பன எதிர்ப்பு பேசி, பிஜேபியுடன் கூட்டுவைத்து கொள்ளை அடித்த இந்த கும்பலுக்கும், திராவிடன், தமிழன், என்று மேடையில் முழங்கி விட்டு ஆதிக்க ஜாதிகளுக்கு ஜால்ரா போட்டுகொண்டு ஜாதி அரசியல் நடத்தும் கருணாநிதிக்கு இந்த வீரமணி ஜால்ரா போட்டுக்கொண்டும், கூஜா தூக்கி கொண்டும் இருப்பது ஏன்? 

இவர்களின் கொள்கைகள்தான் என்ன? இவர்கள் இதுவரை பெரியாரை பின்பற்றி ஜாதி ஒழிப்புக்கும், தீண்டாமை ஒழிப்புக்கும் செய்தது என்ன? 

யாருக்கவது தெரிந்தால் பதில் சொல்லுங்கள்!!!





இந்தியாவில் இருந்து கொண்டு தனித்தமிழ்நாடு மற்றும் தமிழ்தேசியம் பேசும் நண்பர்களுக்கு...


ஒரு தமிழ்தேசிய பெருந்தகை என்னிடம் சொன்னது,

//"வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்" என தொல்காப்பியமும், 

" இமிழ் கடல் வரைபிற் தமிழகம் அறிய", "இமிழ் கடல் வேலியைத் தமிழ்நாடாக்கிய இது நீ கருத்தினை" என சில‌ப்ப‌திகார‌மும் கூறிய‌திலிருந்து த‌மிழ‌க‌ம், த‌மிழ் நாடு போன்ற அடையாள‌ங்க‌ள் தொன்று தொட்டு இருந்து வ‌ந்த‌தை அறிய‌ முடியும்//

இவர்கள் என்ன முட்டாள்களா? தமிழ் கூரும் நல்லுலகம் என்பது தமிழ் மொழியை பற்றியது. அது "தமிழ் நாடு" தனி நாட்டை குறிக்கவில்லை என்ற அடிப்படை அறிவு கூட இவர்களுக்கு இல்லாமலா போய்விட்டது?  "இமிழ் கடல் வேலியைத் தமிழ்நாடாக்கிய இது நீ கருத்தினை" இமிழ் கடலை வென்று அங்கு தமிழ் மொழியை பரவ செய்தவன் என்று பெயர். சும்மா இந்த ரெண்டையும் வைத்து கொண்டு புருடா விட கூடாது, தமிழ் மொழி பேசும் மக்கள் வாழ்ந்த பகுதிகள் எல்லாம் தமிழ்நாடு என்று எப்போது அழைக்கப்பட்டது? 

தற்போதைய தமிழ்நாட்டை பிரித்து ஆண்ட எந்த மன்னனின் ஆட்சி குறிப்பிலாவது "தமிழ்நாடு"  என்று இருக்கிறதா?  கலபறையர், பல்லவர், சோழர், சேரர், பாண்டியர், நாயக்கர், தொண்டைமான், இப்படித்தானே இருக்கிறது. இவ்வளவு ஏன்  இந்த ஆண்ட பரம்பரை புருடா முக்குலோத்தார் என்று எங்காவது இருக்கிறதா? தமிழ்நாட்டில் ஜாதியை வைத்து வரலாறு சொல்லும் இந்த முட்டாள்கள் சொல்கிறார்கள் தமிழ்நாடு என்று ஒன்று ஆரம்ப காலத்திலேயே இருந்ததாம்.   இந்த முட்டாள்களால் "தமிழ்நாடு" என்ற நாட்டை எந்த ஜாதி ஆண்டது என்று சொல்லமுடியுமா? \ராஜராஜனை தெலுங்கர் என்று சொல்லும் கூட்டமும் இருக்கிறது. (கேட்டால் ராஜராஜனின் ஐந்தாவது மனைவி அவர்கள் ஜாதி என்று சொல்வார்கள்).  ஒரு கூட்டம் சொல்லுது, பல்லவர்கள், சேர, சோழ,பாண்டியர்கள் எல்லோரும் பங்காளிகளாம்? 

எப்படி வட நாட்டில் ஹிந்தி மொழி பேசிய மன்னர்கள் தனித்தனியாக தங்களுக்கென்று தனி தேசம் அமைத்து கொண்டு ஆண்டார்களோ அப்படி தற்போதைய தமிழ்நாட்டிலும் தமிழ் பேசிய மன்னர்கள் தனிதனி நாடாகத்தான் ஆண்டார்கள்.

உடனே சில அறிவாளிகள் கேட்பார்கள் "அதென்ன ஹிந்தி மொழி பேசிய மக்கள்? ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு மொழி இருக்கும் போது எப்படி எல்லோரையும் ஹிந்தி மொழி பேசிய மக்கள் என்று சொல்கிறீர்கள்" என்று. தமிழ்நாடு என்று உருவாகும் முன்பு ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளடக்கிய பகுதிகளில் தமிழ் மொழி பொதுவான மொழியாக இருந்ததாக சொல்கிறார்களோ அதே போல ஹிந்தி அவர்களுக்கு பொதுவான மொழியாக இருந்திருக்கலாம்.  

மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கும் போது  மட்டுமே தமிழ்நாடு என்ற ஒரு முழு கட்டமைப்பு உருவானது என்பதை மனதிற்கொண்டு இந்த மாதிரி கருத்துக்களை சொல்லவும். சென்னை என்ற பெயர் யாருடைஎது, அவர் தமிழரா என்று யாரிடமாவது விசாரித்து  விட்டு இப்படி கட்டுரைகளை எழுதலாமே. கன்னியாகுமரி தமிழ்நாட்டில் இருந்ததா அல்லது கேரளாவில் இரு இருந்ததா? ஏன் பாலக்காட்டை கொடுத்து விட்டு கண்யாகுமரியை பெற்று கொண்டது தமிழ்நாடு?  (உடனே சில ஜால்ராக்கள் மலையாளியும் தமிழன்தான் என்பார்கள், (இல்லாவிட்டால் அவர்களும் திராவிடர்கள் என்பார்கள்!!!) அவர்களிடம் போய் இப்படி சொன்னால் தெரியும் சேதி )

எப்படி "இந்தியா" என்ற கூட்டமைப்பு ஆங்கிலேயனால் உருவாக்கப்பட்டதோ அதே போல அவர்களாலும் அப்போது இருந்த சில நல்ல அரசியல் வல்லுனர்களாலும் சூட்ட பட்ட பெயர்தான் தமிழ்நாடே தவிர வேறு எதுவும் கிடையாது. சும்மா இப்படி தொல்காப்பியர் சொல்றார், சிலப்பதிகாரம் சொல்கிறது என்ற கதையெல்லாம் வைத்து "தமிழ்நாடு" என்று ஒரு நாடு தனியாக இருந்தது என்ற புருடாவெல்லாம் இங்கே வேண்டாம். அபப்டி பார்த்தால் பாஹியான் போன்ற வெளிநாட்டு பயணிகளின் குறிப்பில் ஹிந்துஸ்த்தான் என்று குறிப்பிட பட்டுள்ளதே, அப்படியென்றால் ஹிந்துஸ்தான் என்ற நாடு தனியாக இருந்ததோ? 

முட்டாள் பயலுகளே அமேரிக்கா என்ற ஒரு நாடு எப்படி உருவானது? ஆங்கிலம் எப்டி அங்கே ஆட்சி மொழியானது? தற்போது உலகமே அவர்களை சார்ந்து இருக்கும் நிலை எபப்டி வந்தது? பதிமூன்று குடியேற்ற நாடுகள் அதாவது ஐரோப்பாவில் இருந்து நாடு பிடிக்க சென்ற கூட்டங்கள், செவ்விந்திய மற்றும் கறுப்பர் மக்களை அழித்துவிட்டு ஒன்றிணைந்து "ஒருங்கிணைந்த அமெரிக்க ஐக்கிய குடியரசு" என்று உருவானது. அதே போலத்தன இங்கேயும் இந்தியாவில் இன்று இந்தியாவில் பஞ்சமர்கள் என்ற அழைக்கபடுபவர்களை அழித்துவிட்டு உருவானதுதான் அப்போதைய மன்னர்கள் ஆட்சி.சில பேரரசர்களாலும், பல சிற்றசர்களாலும், பாளையகாரர்களாலும் , ஜமீன்தார்களாலும் ஆளப்பட்டு சிதறி கிடந்ததே அதுதான்  இந்தியாவும், இவர்கள் சொல்லும் தமிழ்நாடும். உலகமே பேசும் பரநாட்டியம் என்று அனைவரும் ஒப்புகொள்ளும் உண்மை, ஆனால் அந்த தப்பை அடிக்கும் மக்களை மனிதர்களாகவா மதிக்கிறீர்கள்? வேளாண் தொழில் செய்து மக்களுக்கு உணவளித்த மக்களை மதிக்கிறீர்கள்? 

ஒரு வென்னவெட்டி சுப்பன் சொல்றார் 

//"தமிழ்நாடு எனும் பிரதேசம் என்று ஒரே குடையின் கீழ் இருந்தது ?"// பிற்கால‌ச் சோழ‌ர் கால‌த்தில் முழுத்த‌மிழ‌க‌மும் ஒரே குடையின் கீழ் இருந்த‌து// 

எந்த பேரில் தமிழ்நாடு என்ற பேரிலா? சும்மா இப்படி கதையெல்லாம் சொல்ல கூடாது. ஆந்திராவிலும் தனி மாநில கோரிக்கை நடக்கிறது தெலுங்கானா என்ற பெயரில் அதற்காக தெலுங்கானா தனி நாடாக விளங்கியது என்று சொல்லுவீர்களோ? முதலில் சக தமிழனை தமிழனாக மதிக்க கற்றுகொள்ளுங்கள் அப்புறம் தமிழ்நாடு கேட்க போகலாம். பாண்டியன் பேசியதும் தமிழ்தான், சோழன் பேசியதும் தமிழ்தான் ஆனால அவர்கள் ஆண்டது தமிழ்நாட்டைய அல்லது பாண்டிய நாட்டையா அல்லது சோழ நாட்டையா? வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான் நமது பண்பாடு. அது ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட இந்திய என்ற துணை கண்டத்திற்கு மட்டுமல்ல, தமிழ் நாடு என்று மாநிலத்திற்க்கும்தான்.

தனித்தமிழ்நாடு கிடைத்தால் கோவில்கள், மசூதிகள், தேவாலாயங்கள் எல்லாம் இடித்துவிடுவீர்களோ? ஏனென்றால் நீங்கள்தானே சொல்லிக்கொண்டு திரிகிறீர்கள் தமிழனுக்கு மதம் இல்லை என்று, மதத்தை  ஆரியன் கொடுத்த்ள்ள என்ன, முகலாயன் கொடுத்தால் என்ன, ஆங்கிலேயன் கொடுத்தால் என்ன? 

தமிழ்நாட்டில் இருக்கும் ஜாதிகளை ஒழித்துவிடுவீர்களா? ஜாதி மாநாடுகளை, ஜாதி தலைவர் விழாக்களை தடுத்துவிடுவீர்களா? மலம் அல்லும் தொழிலிலும் , குப்பை கூட்டும் தொழிலிலும்  ஜாதி இந்துக்களுக்கு முன்னுரிமை கொடுப்பீர்களா? 

தனி தமிழ்நாடும் தமிழ் தேசியமும் இலங்கைக்கு தேவை,  இந்தியாவில் வாழும் தமிழனுக்கு இல்லை. இந்த தமிழ் தேசிய கருத்துக்களை இலங்கையோடு நிறுத்தி கொள்ளுங்கள். இந்தியாவிற்கு தமிழ் தேசியம் தேவையில்லை. முடிந்தால் சாதியற்ற தமிழ்தேசியம் அமைப்போம் என்று சொல்லுங்கள், அதற்காக போராட முன்வாருங்கள் உங்களின் தோளோடு தோல் சேர்க்க நாங்களும் இருக்கிறோம். 

"மூட நம்பிக்கை" என்றால் அது "தமிழன்" "திராவிடன்" என்று சொல்பவர்களுக்கு மட்டும் இல்லையோ?


குறிப்பு: இது பலாபிசேகத்தையும் நெய் அபிசேகத்தையும் ஆதரித்து எழுதபட்டது இல்லை. 

மூடநம்பிக்கையை பார்பனர்கள் மட்டும்தான் சொல்லி கொடுத்தார்கள் என்று சொல்லும் அறிவாளி தமிழர்கள் அதாவது நாத்திக ஹிந்துக்கள்,  அதாவது திராவிடர்கள் இந்த ஆடு கோழி வெட்டுவதை சிறு தெய்வ வழிபாடு என்று மட்டும் எப்படி ஏற்று கொள்கிறார்கள்?? ஆடு கோழி வெட்டுவது கலாச்சரம் பண்பாடு என்று சொல்லும் இவர்கள் எந்த உயிரையும் கொல்லாமல் பாலையும், அதில் இருந்து கிடைக்கும் நெய்யையும் வைத்து அபிசேகம் செய்வதை மட்டும் எப்படி மூட நம்பிக்கை என்கிறார்கள்? மூடநம்பிக்கை என்பது உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும், மதங்களிலும் இருக்கிறது. தமிழன் என்று சொன்னால் அங்கே மூட நம்பிக்கை இல்லாமல் போய்விடுமா என்ன? 

பிராமின்களின் ஆதிக்கமே இல்லாத இலங்கையில் இங்கே இருப்பதை விட மிக அதிகமாக, இந்து மதத்தை பின் பற்றுகிறார்கள், அங்கேயும் பாலாபிசேகமும், நெய் அபிசேகமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது, அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து கொண்டிருக்கும் இந்த நாத்திக ஹிந்துக்கள் இதுவரை அவர்களுடன் இந்து மதம் என்பது தமிழர் பண்பாடு இல்லை என்று ஏன் சொல்லவில்லை? தமிழன் என்றால் எல்லா இடத்திலும் தமிழன் தானே? ஒரு வேலை இலங்கை தமிழர்கள் ஹிந்து தமிழர்கள் என்று சொல்வார்களோ?

 தமிழன் என்பதற்காக அவர்களிடம் மூட நம்பிக்கை இல்லாமல் போய்விடுமோ? இவர்கள் உண்மையில் மூடநம்பிக்கை எதிர்ப்பாளர்களாக இருந்தால் இதை பண்பாடு கலாச்சாரம் என்று சொல்ல மாட்டார்கள்  பாலாபிசேகம் செய்வதை விட இதுதான் கொடுமையான மூடநம்பிக்கை என்று ஒப்புகொள்வார்கள் 

இந்த நாத்திக ஹிந்துக்களுக்கு  பார்பனர்கள் என்ற ஜாதியை மட்டும்தான் எதிர்க்க வேண்டுமே தவிர தமிழனை ஒன்று சேர்க்கவோ அல்லது சிறு தெய்வ வழிபாட்டில் ஜாதி மத வேறுபாடின்றி தமிழனாக எல்லோரும் கலந்து கொள்ளவேண்டும், அங்கே ஜாதி இல்லாமல் மக்கள் ஒன்றாக இருந்து பூஜை செய்து உணவு உண்டு வாழ வேண்டும் என்று சொல்வதில்லியே ஏன்?

தமிழன் தமிழன் என்று மேடையில் முழங்கும் வைகோ, நெடுமாறன், ராமதாஸ், சீமான், வீரபாண்டியன், வீரமணி போன்றோர் பிறந்தஊர்களிலும் அதை சுற்றி உள்ள அனைத்து ஊர்களிலும் இன்னைக்கு கூட ஜாதி வெறி தலை விரித்து ஆடுகிறதே, அதற்காக இவர்கள் இதுவரை என்ன செய்து இருக்கிறார்? தமிழன் என்று ஒரே இனம்தான் இங்கே ஜாதி இல்லை என்று ஒரு முன்னோடியாக அனைத்து ஜாதி மக்களையும் ஒரே இடத்தில் குடியமர்த்த வேண்டியதுதானே, இதை அவர்கள் பிறந்த ஊரிலேயே இதை செய்தால் ஒரு முன்னோடியாக இருக்குமல்லவா?

இதை இதுவரை யாராவது செய்து இருக்கிறார்களா? அல்லது இவர்களுக்கெல்லாம் முன்னோடி பகுத்தறிவு பகலவந்தான் செய்து இருக்கிறாரா? இந்த நாத்திக ஹிந்துக்கள்  சொல்லும் இந்த பார்பன எதிர்ப்பு என்பது தமிழ்நாட்டில் இளைஞர்களை கெடுத்து குட்டி சுவராக்கும் வேலை, இதனால்த்தான் திராவிட கட்சிகள் இளைஞர்களுக்கு குவார்ட்டரும், பிரியாணியும் வாங்கி கொடுத்து அடியாட்களாக வைத்து கொண்டு இருக்கிறார்கள், குறிப்பாக தலித் இளைஞர்களை.

நான் இந்த குல தெய்வ வழிபாட்டில் மிக அதிக நம்பிக்கை உள்ளவன். ஏனென்றால் அது நம் முன்னோர் வழிபடு அனால் எப்படி பாலாபிசேகமும், நெய் அபிசேகமும் மூட நம்பிக்கையோ அது போல ஆடு வெட்டுவதும் கோழி வெட்டுவதும் மூட நம்பிக்கைதான், அந்த மூட நம்பிக்கையைத்தான் நானும் செய்து கொண்டு இருக்கிறேன். 

ஆனால் ஒரு உயிரை கொள்வது பண்பாடு, கலாச்சாரம் என்று சொல்வதை எப்படி ஏற்றுகொள்ள முடியும்? 

Sunday, February 5, 2012

எனக்குள்ளே நான் கேட்கும் பல கேள்விகளில் சில.........


முதலில் நம்மைப் பறையன்/பள்ளன்/சக்கிலியன்/இருளன்/குறவன் எனச் சொன்னால் ஏன் சிலருக்கு கோபம் வருகிறது? அது சாதி சார்ந்து இழிவான வார்த்தை என்பதைத் தீர்க்கமாக நம்புவதால்தானே இப்படியொரு உடனடி எதிர்ப்புணர்வு? ஆழ்மனதின் எந்தப் பகுதியை அந்தச் சொல் தீண்டுகிறது? குழந்தை முதல் அவர்களின் மனதில் இதை புகுத்தியது யார்? 

சாதி மீது இந்தச் சமூகம் கொண்டிருக்கும் அதீதமான நம்பிக்கையைப் பறையர்/பள்ளர்/சக்கிலியன்/குறவன் எனும் சொல் அசைத்துப் பார்ப்பதை முரணான ஒரு செயல்பாட்டின் மீது பதியும் நியாயமான எதிர்ப்பாகவே கருத முடிகிறது. 

சமூகத்தின் சரிபாதி மனிதர்கள் தன்னைப் பெருமையாக கவுண்டன் எனவும் முக்குலத்தோன் எனவும் தேவர் எனவும் சொல்லிக்கொள்வதில் ஆர்வம் காட்டும்போது, எப்படிப் பறையன் எனும் சொல் இப்படியொரு தீண்டத்தகாத அறுவறுக்கத்தக்க சொல்லாக மாறியது? 

உங்கள் முன் ஒருவன் வந்து நின்று தன்னை “பறையன்” "பள்ளன்" "சக்கிலியன்"  "இருளன்" "குறவன்"எனச் சொல்லிக்கொண்டால் அவனை உங்களுக்கு (தமிழ் தேசியம், திராவிடம் பேசும் சூத்திர, ஷத்ரிய ஆதிக்க ஜாதிகளுக்கு) நிகரான சக மனிதனாகப் பாவிக்க மனமுண்டா?

1. நடத்தைத் தவறி போகும் அனைவரையும் “இவன் (பறையன், பள்ளன்) அவந்தான்” என விமர்சிப்பது. பட்டண வாழ்க்கைக்கு இடம் பெயர்ந்தும் பெரியவர்களின் மனித அவதானிப்புகளில் இந்தப் பார்வை ஒரு வன்முறையான சொல்லாடல்களைக் கொண்டிருந்ததை நாம் மறுக்க முடியாது. தன்னால் வகுக்கப்பட்ட சமூக ஒழுக்கங்களை மீறும் யாவரையும் “ அந்தப் (பற, பள்ள எதாவது ஒன்றை சொல்லி )புத்திடா அவனுக்கு” என மிகவும் வெளிப்படையாக அடையாளப்படுத்தும் போக்கு இருந்து வந்திருக்கிறது. இங்கு அந்தச் சொல் யாரால் கொண்டு வரப்படுகிறது? கொண்டு வரப்பட்டதே இல்லை என யாராவது சொல்ல முடியுமா?

2. முறையான பழக்க வழக்கங்களைப் பின்பற்றாதவர்களை (பறை, பள்ளு என்று குறிப்பிட்டு)“அவன்” எனச் சாடுவது. பிறர் வீட்டுக்குச் சென்றால், அங்கு அமர்வது முதல் சாப்பிடும்முறை வரை மிகவும் கூர்மையாகக் கவனிக்கப்பட்டு விமர்சிக்கப்படும் பண்பு நிலவி வந்திருக்கிறது. சோற்றைக் கீழே சிந்தி சாப்பிட்டதற்காகப் பலமுறை, “(சக்கிலி, குறபயல்) அவன் மாதிரி சாப்பிடாதடா” என விமர்சிக்கப்பட்ட எத்தனையோ சிறுவர்களைப் பார்த்திருக்கிறேன். சிறுவர்களின் மிக யதார்த்தமான பழக்க வழக்கங்கள் மீது சாதிய உணர்வுகளைத் திணித்தது யார்? அந்தக் காலத்திலேயே இதெல்லாம்தான் அந்தச் சொல்லுக்கு மிக நெருக்கமான பழக்க வழக்கங்களோ எனக் கற்பிக்கப்பட்டு வளர்க்கப்பட்ட குழந்தைகளின் மனதில் என்ன விடுதலை உணர்வு இருக்கப் போகிறது?

3. திருமணம் சமயங்களில் அல்லது காதலித்துவிட்டவர்களிடம் இன்னமும் வாடிக்கையாகச் சடங்கு போல கேட்கப்படும் கேள்வி என்னவாக இருக்கிறது? நீங்க எந்த ஆளுங்க? சாதி எனும் சொல் மறைந்து கொஞ்சம் நாகரிகமாக “ஆளுங்க” எனும் சொல் உபயோகத்தில் உள்ளது. இந்த அளவிற்குத்தான் நம் சமூகம் கொஞ்சம் நகர்ந்துள்ளது. இதையே முற்போக்குத்தனம் எனச் சொல்லிக் கொண்டு பெருமை அடையலாமா? இன்னமும் நாளை நடக்கவிருக்கும் திருமணத்திற்குப் பின்னணியில் இம்மாதிரியான சாதியத்தை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தும் கேள்விகள் கரையாமல் எழுந்த வண்ணமே இருக்கின்றன.

4. நமக்கு வேண்டாதவர்களையும் பிடிக்காதவர்களையும் அவமானப்படுத்தும் பொருட்டு மற்ற மதத்தினர் முன்பே அவனை (பறையன்/பள்ளன்/சக்கிலியன்/இருளன்/குறவன்) அந்தச் சொற்க்களைப் பயன்படுத்தி அழைப்பதிலும் கூட, சாதிய பார்வை உருவாகியிருக்கிறது. ஆகையால் பள்ளியில் படித்தக் காலக்கட்டத்தில் வெறுப்பின் உச்சத்திற்குப் போகும் மாணவர்கள் அந்தச் சொல்லைப் பயன்படுத்தி திட்டிக் கொள்வது முதல், அடுத்த மதத்தைச் சேர்ந்த மாணவர்கள் அதே சொல்லைப் பயன்படுத்தி நம்மை இழிவுப்படுத்திப் பேசுவதுவரை சாதியம் உக்கிரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. (என் காது பட நடந்தது: ரெண்டு முஸ்லீம் நண்பர்கள், நான் என் தம்பிகள், என் தம்பிகளின் முஸ்லீம் நண்பர்கள் அனைவரும் தெருவில் சத்தம் போட்டு விளையாடும் போது என் முஸ்லீம் நண்பனின் தாய் "ஏண்டா இப்படி கொற (குற) கூட்டம் மாதிரி கத்தி கொண்டு இருக்கிறீர்கள்" என்று சொன்னார்களே எனக்கு ஒரு மாதிரி போய்விட்டது. ஜாதி பெயர் சொல்லி திட்டுவது அடுத்த மதத்தினரையும் தொற்றி கொண்டு விட்டதா என்று ) ஒட்டுமொத்தமாக மாணவர்களின் உளவியலில் அந்தச் சொல் கொடூரமான இழிவுப்படுத்தும் சொல்லாக மாறியுள்ளது.

ஆதிதிராவிட/திராவிட......................

தமிழ்நாட்டில் ரெண்டு குழுக்கள் இருக்கின்ற ஒன்று திராவிடர்கள் மற்றொன்று ஆதிதிராவிடர்கள். இதில் ஆதி திராவிடர்கள் என்பவர்கள் திராவிடர்களுக்கு முன்னமே இந்த மண்ணில் வாழ்ந்த ஆதி குடிகள், ஆதி தமிழர்கள், தொல் தமிழர்கள், தொல்குடிகள் என்று எப்படி வேண்டுமானலும் வைத்து கொள்ளலாம் அல்லவா?

தமிழ்நாட்டில் திராவிட கலாசாரம் என்பது ஆதிதிராவிட கலாச்சாரத்தை பின்பற்றி வந்துதானே இருக்கிறது. பண்பாடு, கலாச்சாரம் என்பது ஆதிதிராவிடர்களிடம் இருந்து வந்ததுதானே இப்போதைய தமிழர்களுக்கும் திராவிடர்களுக்கும். 

இப்படி இருக்கும் போது, பெரியாரும் அவருடன் சேர்ந்தது திராவிட இயக்கம் ஆரம்பித்தவ்ர்களும் ஏன் அதற்கு "திராவிட இயக்கம்" என்று பெயர் வைக்க வேண்டும்? (பண்டிதரின் கருத்துக்களை கொள்ளை அடித்து ஆரம்பிக்க பட்ட கழகம்) "ஆதிதிராவிட இயக்கம்" என்று அல்லவா வைத்து இருக்க வேண்டும். ஏன் வைக்கவில்லை? ஆதிதிராவிட கலாச்சாரத்தை அல்லவா போற்றி பாதுகாக்க வேண்டும். ஆதிதிராவிட கலாச்சாரத்தை அல்லவா முன்னிறுத்தி போராடி இருக்க வேண்டும். 

இவர்கள் சொல்லும் ஆரியர் படையெடுப்பினால் அழிக்கப்பட்டது ஆதிதிராவிட கலாசாரம்தானே அப்புறம் ஏன் மூச்சுக்கு முன்னூறு தடவை திராவிட கலாச்சாரம் திராவிட கலாச்சாரம் என்று புலம்புகிறார்கள்? ஆதிதிராவிட கலாச்சாரம் என்றல்லவா புலம்பவேண்டும்? 

உண்மையில் ஆரியர் படையெடுப்பு நடந்து இருந்தால் அங்கே அழிக்கப்பட்டது ஆதிதிராவிட கலாசாரம்தனே திராவிட கலாச்சாரம் இல்லியே, அப்படி இருக்கும் போது இவர்கள் ஏன் திராவிட கலாச்சாரம், தமிழர் கலாச்சாரம் என்று சொல்கிறார்கள். 

ஆதிதிராவிட கலாச்சாரத்தில் இருந்து உருவான வள்ளுவன் வேண்டும், இளங்கோ வேண்டும்... பண்டிதன் அயோத்திதாசன் வேண்டும் ஆனால் ஆதிதிராவிட கலாச்சாரம் வேண்டாம். 

ஆதிதிராவிடர்களின் எச்சிலை தின்று வந்த கலாச்சாரம் திராவிட கலாச்சாரம் ஆனால் அதை முதன்மை படுத்தி, எங்களை தனிமை படுத்தி தாழ்த்தப்பட்டவர்கள் எல்லாம் ஆதிதிராவிடர்கள் ஆண்ட பரம்பரைகள் எல்லாம் திராவிடர்கள் என்று சொல்லாமல் சொல்லி கொண்டு திரிகிறார்கள் அதற்க்கு ஆதிதிராவிடர்களிலும் பல பேர் ஜால்ரா தட்டுகிறார்கள்.